கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்று(மே 18) மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும், 28ம் தேதி, கல்வி, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில், பள்ளிகளில் குலுக்கல் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 29ம் தேதி முதல், 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.