அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன.மேலும், பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை மூடுகின்ற நிலை அரசுக்கு இல்லை. அந்தப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர், பொது மக்களின் கருத்தை கேட்ட பின்னர் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனஅரசு பரிசீலிக்கும்.